லாகூரை உலுக்கிய இரட்டைக் குண்டுவெடிப்பு - 39 பேர் பலி
லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் நகரில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்தனர்.
கொல்லப்பட்டவர்களில் 10 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். லாகூர் கண்டோன்மென்ட் பகுதியில், ராணுவ வாகன வரிசையைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இன்று பிற்பகல் உள்ளூர் நேரப்படி 12.48 மணிக்கு ஆர்.ஏ.பஜார் பகுதியில், ரோந்து வந்து கொண்டிருந்த ராணுவத்தினர் மீது நடந்து வந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
அதேபோல மசூதி ஒன்றில் இன்னொரு குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இந்த மசூதிக்கு ஏராளமான ராணுவத்தினர் வருவது வழக்கம். எனவே ராணுவத்தினரைக் குறி வைத்தே இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன.
மொத்தம் 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் இந்த செயலை நிகழ்த்தியுள்ளனர். இருவரது தலைகளும் துண்டிக்கப்பட்டுக் கிடந்தன. அவர்கள் நடந்து வந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications