ஒரிசாவில் 13 வயது மாவோயிஸ்ட் சிறுவன் கைது
பரிபாதா (ஒரிசா): ஒரிசாவில் 13 வயதேயான மாவோயிஸ்ட் சிறுவன் போலீஸில் சரணடைந்துள்ளான்.
2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிறுவனை மாவோயிஸ்டுகள் வலுக்கட்டாயமாக தங்களது இயக்கத்தில் சேர்த்து விட்டனராம். இந்த நிலையில், நேற்று இச்சிறுவன் மாவோயிஸ்டுகள் பிடியிலிருந்து தப்பி போலீஸிடம் சரணடைந்தான்.
அந்த சிறுவனின் பெயர் ஜதியா சித்து. 2 ஆண்டுகளுக்கு முன்பு கியோஞ்சார் மாவட்டம், கடசஹி கிராமத்திலிருந்து மாவோயிஸ்டுகளால் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டான்.
அங்கு அவனுக்கு பிபின் என பெயர் சூட்டப்பட்டு மாவோயிஸ்ட் ஆக மாற்றப்பட்டுள்ளான். கடத்தப்பட்டபோது ஜதியா சித்து 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வனப் பகுதியில் தாக்குதல் நடத்துவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சிமிலிபல் பகுதி கமிட்டி உறுப்பினராகவும் அவன் நியமிக்கப்பட்டான்.
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பொருட்களைக் கொண்டு செல்வது, முகாம்களை விட்டு நக்சலைட்டுகள் செல்லும்போது அவற்றை பத்திரமாக பார்த்துக் கொள்வது போன்ற பணிகளைச் செய்து வந்துள்ளான் இந்த சிறுவன் என்று போலீஸ் தரப்பில் தெரிவி்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications