ஆஸி.யில் கொல்லப்பட்ட சிறுவனின் உடலுடன் பெற்றோர் இன்று வருகை
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலாவுக்குப் போன இடத்தில் கொலை செய்யப்பட்ட சிறுவன் குர்ஷானின் பெற்றோர் இன்று தாயகம் திரும்புகின்றனர்.
பஞ்சாபைச் சேர்ந்த சிறுவன் குர்ஷானின் (வயது 3) தாயார் ஆஸ்திரேலியாவில் படித்து வருகிறார். அவரைக் காண தனது தந்தையுன் குர்ஷான் ஆஸ்திரேலியா சென்றிருந்தான்.
போன இடத்தில் மார்ச் 4ம் தேதி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டான் குர்ஷான்.
இந்த நிலையில், தற்போது குர்ஷானின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உடலுடன், இன்று குர்ஷானின் பெற்றோர் இந்தியா திரும்புகின்றனர்.
பரீத்கோட் நகரில் திங்கள்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து குர்ஷானின் தந்தை ஹர்ஜீத் கூறுகையில், எனது பெற்றோர் கனடாவிலிருந்து வருகிறார்கள். அனைவரும் வந்து சேர்ந்த பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
திங்கள்கிழமை இறுதிச் சடங்கை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
எனது மகனுக்கு நேர்ந்த சம்பவம் என்னை பெரும் துயரத்திலும், கோபத்திலும் தள்ளியுள்ளது. எனது மகனை இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்தது ஏன் என்று அந்தக் கொலையாளியிடம் மீடியாக்கள் கேட்க வேண்டும். அந்தக் குற்றவாளி பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார்.
முன்னதாக இந்தியத் தூதரகத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் இந்தியத் தூதர் அனிதா நாயர், பெரும் திரளான இந்தியர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications