பிரதமர், சோனியாவின் பாராட்டுக்கு முழுத் தகுதி படைத்தவர் கருணாநிதி - ரோசய்யா
சென்னை: புதிய சட்டசபைத் திறப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்த பாராட்டுக்கும், புகழாரத்திற்கும் முழுத் தகுதி படைத்தவர் முதல்வர் கருணாநிதி என்று ஆந்திர முதல்வர் ரோசய்யா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
சென்னையில் தமிழக சட்டமன்றபேரவை வளாகம் மற்றும் தலைமை செயலகம் புதிதாக கட்டப்பட்டு அதன் தொடக்க விழா கடந்த 13-ந்தேதி சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் நான் பங்கேற்றது மகிழ்ச்சியாக பெருமையாக உள்ளது.
அந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நீங்கள் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் சமூக நலத்திற்காகவும் பாடுபட்டு வருவதை பாராட்டி பேசிய போது எனக்கு பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது.
அந்த பாராட்டுக்கு மிகவும் தகுதியானவர் நீங்கள் என்று கூறி உங்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ரோசய்யா.












Click it and Unblock the Notifications