For Daily Alerts
Just In
பென்னாகரம் இடைத் தேர்தல் - பிரேமலதா விஜயகாந்த் 4 நாள் பிரசாரம்
சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் காவேரி வர்மனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் நான்கு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடைபெறவுள்ள பென்னாகரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் கே.ஜி. காவேரிவர்மனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் 19, 20, 21, 22 ஆகிய நான்கு நாட்கள் தொகுதி முழுவதும் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.
மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்கின்ற பகுதிகளில் சிறப்பான முறையில் வரவேற்று தேர்தல் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றித் தரக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, March 17, 2010, 9:31 [IST]