பேராவூரணி அருகே பள்ளி வேன் விபத்து - 8 வயது மாணவி பலி - ஏரலில் 3 மாணவர்கள் பலி
பேராவூரணி: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பள்ளி வேன் விபத்துக்கு உள்ளாகி 8 வயது மாணவி பலியானார். 39 குழந்தைகள் காயமடைந்தனர்.
இதேபோல ஏரலில் நடந்த சாலை விபத்தில் 3 மாணவர்கள் கோரமாக பலியானார்கள்.
பேராவூரணி அருகே செங்கமங்களம் பகுதியில் இந்த விபத்து இன்று காலை நடந்துள்ளது. பள்ளிக்கு செல்வதற்காக 40 குழந்தைகளை ஏற்றிச் சென்றபோது பள்ளி வேன் சாலையில் திடீரென நிலை தடுமாறி கவிழந்தது.
இந்த விபத்தில், வேனில் இருந்த 40 குழந்தைகள் காயமடைந்தனர். பிரியங்கா என்ற 8 வயது குழந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பிரியங்கா உயிரிழந்தார்.
பைக்கில் சென்ற 3 மாணவர்கள் பலி:
இதேபோல, தூத்துக்குடி அருகே பழையகாயலில் இன்று காலை பஸ் மீது பைக் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
நாசரேத்தில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு தனியார் பஸ் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்த குருசாமி என்பவர் ஓட்டினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் முக்காணிக்கும், பழையகாயலுக்கும் இடையே தனியார் சேம்பர் செங்கல்சூளை அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே வேகமாக வந்த பைக் பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்த பழையகாயல் அம்புரோஸ் நகரை சேர்ந்த சிலுவைபிச்சை மகன் ராகுல், பரதர் தெரு சம்பத்ராஜ் மகன் நிஷாந்த், மாரமங்கலம் மிக்கெல்சாந்தி மகன் விஜய், ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இவர்கள் 3 பேரும் பழையகாயலில் உள்ள புனித அந்தோணியர் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். இன்று பள்ளி விடுமுறையை ஓட்டி மாணவர்கள் பெட்ரோல் போடுவதற்காக பைக்கில் முக்காணிக்கு வந்தபோது விபத்தில் சிக்கினர்.
தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் டிஎஸ்பி நடராஜமூர்த்தி, ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications