மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு இன்னும் தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது குடும்பத்தைச் சுற்றி பரவி வரும் தகவல்கள் சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன.
பாரதிராஜாவின் இறுதிச்சடங்கின்போது அவரது மகள் ஜனனி மற்றும் மருமகள் நந்தனா இடையே ஏற்பட்டதாக கூறப்பட்ட வாக்குவாத வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவின. அந்த வீடியோக்களை பார்த்த பலரும், "பாரதிராஜா குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?" என்ற கேள்வியை எழுப்பினர். இதற்கிடையில் தற்போது பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் அளித்துள்ள பேட்டி, அந்த விவாதத்தை மீண்டும் தலைதூக்க வைத்துள்ளது.

பாரதிராஜா தம்பி பேட்டி
அந்த பேட்டியில் பேசிய ஜெயராஜ், மனோஜ் மறைந்த பிறகு அவரது மனைவி இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
"மனோஜின் இரண்டு மகள்களும் வளர்ந்து வரும் வயதில் இருக்கிறார்கள். அவர்களின் படிப்பு, எதிர்காலம் போன்ற காரணங்களுக்காக தனியாக வசிக்கிறார்கள். அதனால் குடும்பத்தில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம் கிடையாது" என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், "நாங்கள் அனைவரும் இப்போதும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். அண்ணன் பாரதிராஜாவின் சொத்துக்களில் இருந்து வரும் வாடகை வருமானத்தின் மூலமாகவே மனோஜ் குடும்பம் வாழ்ந்து வருகிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.
சொத்து பிரச்சனையா?
பாரதிராஜாவின் இறுதிச்சடங்கில் ஏற்பட்டதாக கூறப்பட்ட வாக்குவாதம் வெளியானபோதே, அது சொத்து தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம் என்ற பேச்சுகள் சமூக வலைதளங்களில் பரவின. ஆனால் இதுவரை குடும்ப உறுப்பினர்கள் யாரும் அந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும், மருமகள் தனியாக வசித்து வருவதாக ஜெயராஜ் கூறியிருப்பது மீண்டும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கங்கை அமரனின் கோபமும் பரபரப்பும்
இதற்கு முன்பாக பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த குடும்பத்தினர் வந்திருந்தபோது, இசையமைப்பாளர் கங்கை அமரன் உணர்ச்சி வசப்பட்டு பேசிய சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது அவர், "கடைசி நேரத்துல அவரை அனாதையா விட்டுட்டீங்களே" என கோபமாக பேசியதாக வீடியோக்கள் வெளியாகின. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பின்னர் விளக்கம் அளித்த கங்கை அமரன், "அது குடும்பத்தின் மீது இருந்த கோபம் இல்லை. பல வருட நட்பின் காரணமாக ஏற்பட்ட ஆதங்கம். குடும்பத்துக்குள் இருக்கும் விஷயங்களை நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம்" என்று கூறியிருந்தார்.

மகன் இழப்பால் உடைந்த பாரதிராஜா
கடந்த ஆண்டு மகன் மனோஜின் மறைவு பாரதிராஜாவை மிகவும் பாதித்ததாக அவரது நெருங்கிய நண்பர்கள் பலரும் கூறியுள்ளனர். வெளியில் எப்போதும் உற்சாகமாக காணப்பட்டாலும், உள்ளுக்குள் அந்த துயரத்தில் இருந்து அவர் முழுமையாக மீளவில்லை என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.
மகனை இழந்த வேதனையோடு வாழ்ந்த பாரதிராஜா, தற்போது இந்த உலகைவிட்டு பிரிந்துவிட்ட நிலையில், அவரது குடும்பத்தைச் சுற்றியுள்ள தகவல்கள் ரசிகர்களை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரசிகர்கள் வேண்டுகோள்
சமூக வலைதளங்களில் பல ரசிகர்கள், "பாரதிராஜா வாழ்நாள் முழுவதும் குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்கவே விரும்பினார்", "இப்படி வதந்திகள் பரவாமல் குடும்பத்தினர் ஒன்றாக இருக்க வேண்டும்", "இயக்குநர் இமயத்தின் நினைவுக்கு களங்கம் வரக்கூடாது" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாரதிராஜா தமிழ் சினிமாவுக்கு விட்டுச் சென்ற கலைச் சொத்துகள் எவ்வளவு பெரியதோ, அதேபோல் அவரது குடும்பமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
-
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
பாரதிராஜா சமாதியில் நெகிழ வைத்த சினேகன்.. குழந்தைகளை வைத்து கன்னிகா செய்த செயல்.. வியந்த ரசிகர்கள் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"பாரதிராஜாவின் உடல் அருகே வெடித்த குடும்ப மோதல்? கதறிய பேத்திகள்.. கெஞ்சிய ராதிகா!.. ரசிகர்களை உலுக்கிய சம்பவம்!" -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
பாரதிராஜாவை உடைத்தது இதுதான்! குடும்ப பிரச்சனை.. ராதாரவி சொன்ன தகவல்.. பீல் பண்ணும் ரசிகர்கள் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு














Click it and Unblock the Notifications