தமிழகம் முழுவதும் 3200 பேர் தேர்தலில் போட்டியிட தகுதியிழப்பு: தேர்தல் ஆணையர்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 200 பேர் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் இதுபற்றி கூறியதாவது: தமிழகத்தில் 12 ஆயிரத்து 618 சிற்றூராட்சிகள், 385 யூனியன்கள், 10 மாநகராட்சிகள், 98 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் உள்ளன.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 லட்சத்து 30 ஆயிரத்து 962 பதவிகள் நிரப்பப்பட வேண்டியுள்ளது. கிராமப்பகுதிகளில் 40 ஆயிரத்து 879 வார்டுகளில் 97 ஆயிரத்து 548 வார்டு உறுப்பினர்கள் பதவி நிரப்பப்பட வேண்டியுள்ளது.

ஆறுமாத இடைவேளியில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத இறுதி வரையில் 653 கிராமப்புற உள்ளாட்சி பதவிகளூம், 81 நகர்புற உள்ளாட்சி பதவிகளும் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதற்காக பதற்றமான பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பல உள்ளாட்சி தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது. 2011 ஆண்டு தேர்தலில் முழுக்க முழுக்க மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 3200 பேர் தேர்தலில் போட்டியிட தகுதி இழந்துள்ளனர்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+