சாலையில் கவிழ்ந்து பீர் லாரி விபத்து- கொட்டிய பீரை அள்ளிக் குடித்த 'குடி' மக்கள்
சென்னை: சென்னையிலிருந்து விருதுநகருக்கு பீர் பாட்டில்களுடன் சென்ற லாரி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து விழுந்தது. இதில் பீர் பாட்டில்கள் உடைந்து பீர் சாலையில் ஆறாக ஓடியது. இதைப் பார்த்த 'குடி'மக்கள் ஓடி வந்து அதை அள்ளிக் குடித்து ஆனந்தமடைந்தனர்.
சென்னையில் இருந்து பீர் பாட்டில்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி விருதுநகருக்கு புறப்பட்டது. லாரியை தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மாடசாமி (40) என்பவர் ஓட்டிவந்தார்.
அந்த லாரி இன்று காலை 7 மணியளவில் திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியம் என்ற இடத்தில் வந்த போது பின்பக்க ஆக்சில் முறிந்து விபத்துக்குள்ளானது.
நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த பீர்பாட்டில்கள் அனைத்தும் உடைந்து ரோட்டில் ஆறாக ஓடியது. இதனை அவ்வழியே சென்ற குடிமகன்கள் பார்த்து உடையாத பீர் பாட்டில்களை பெட்டி பெட்டியாக அள்ளிச் சென்றனர்.
பலர் கொட்டி பீரை அப்படியே அள்ளிக் குடித்தும் ஆனந்தமடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து பாட்டில்களை பெட்டி பெட்டியாக அள்ளிக் கொண்டு போனவர்களை தடுத்து நிறுத்தி பாட்டில் பெட்டிகளை கைப்பற்றினர்.
-
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்












Click it and Unblock the Notifications