சென்னை குடும்ப நல கோர்ட்டில் தீவிபத்து - பீதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை குடும்ப நல கோர்ட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பீதி ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல கோர்ட் உள்ளது. இதன் முதல் தளத்தில் இன்று காலை திடீரென மின்சார பாக்ஸில் தீப்பிடித்துக் கொண்டது.
பயங்கர சப்தத்துடன் தீவிபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் அங்கிருந்து ஓடினர். தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர்.
மின்துறையினரும் விரைந்து வந்து மின் இணைப்பைத் துண்டித்தனர். சிறிது நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications