தமிழக பட்ஜெட் 2010-11 முக்கிய அம்சங்கள்

-ஆணிகள், வாசர்கள், மொசைக் சிப்ஸ்கள், பிளாஸ்டிக் புகைப்படச் சட்டங்கள் மீதான வரி 4 சதவீதமாக குறைப்பு
-அரவாணிகள் நலனுக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு
-திடக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருளுக்கு வரி விலக்கு.
-கோவையில் தகுதி படைத்த பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் ஒதுக்கீடு.
-வழக்கறிஞர் நல நிதிக்கு ரூ. 2 கோடி
-எம்.கே.தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாடும்.
-ரூ. 100 கோடியில் 1100 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
-திண்டுக்கல்லில் விருப்பாச்சி கோபால் நாயக்கருக்கு நினைவிடம் அமைக்கப்படும்.
-செங்கோட்டையில் தியாகி வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டப்படும்.
-நெல்லையில், அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த ஒண்டி வீரருக்கு நினைவிடம் அமைக்கப்படும்.
-ஓமந்தூர் கிராமத்தில், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு மணி மண்டபம் கட்டப்படும்.
-உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு.
-கோவையில் ரூ. 20 கோடியில் செம்மொழித் தமிழ்ப் பூங்கா அமைக்கப்படும்.
-இலங்கை தமிழர் நலனுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு
-வரும் கல்வியாண்டு முதல் தமிழ் வழி பொறியியல் கல்வி அறிமுகம்.
-வரி வருவாயில் தென் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பங்கீடு குறைப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
-மேலும் 22 தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படும். நூல்களின் எண்ணிக்கை, பயன்கள், சிறப்புகளுக்கேற்ப மரபுரிமையர்க்கு பரிவுத் தொகை வழங்கப்படும்.
-அரசு அலுவலகங்களை கம்ப்யூட்டர்மயமாக்கவும், நெட்வோர்க்குக்குள் கொண்டு வரவும் ரூ. 22 கோடி ஒதுக்கீடு
-ஆற்றுப் படுகைகளில் தேக்கு மரம் வளர்க்கும் திட்டத்திற்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு.
-பனை வாரியம் கொள்முதல் செய்யும் பதநீருக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 10 ஆக அதிகரிக்கப்படும்.
-ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ. 394 கோடி ஒதுக்கீடு
-ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவிக்கு ரூ. 198 கோடி ஒதுக்கீடு
-பொறியியல் படிக்கும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படும்.
- 20,000 ஆதி திராவிட, பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
-விசைத்தறி நெசவாளர்களுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்திற்காக ரூ. 78 கோடி ஒதுக்கீடு.
-சாலை விபத்துகளை தடுக்கும் திட்டத்திற்கு ரூ .40 கோடி ஒதுக்கீடு
-சென்னை கோயம்பேட்டில் புதிய கழிவு நீர் சுத்திக்கரி�பு மையம் அமைக்கப்படும்
-வரி நிலுவைகளை தீர்வு செய்ய புதிய திட்டம்
-பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ரூ. 459 கோடி ஒதுக்கீடு.












Click it and Unblock the Notifications