பொறியியல் பட்டதாரிகளில் 50% மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள் - பாலகுருசாமி
கோவை: பொறியியல் பட்டம் பெறும் மாணவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே, பணி புரிய தகுதி உள்ளவர்களாக இருக்கின்றனர் என்று மத்திய பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாலகுருசாமி வருத்தத்துடன் கூறியுள்ளார்.
கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில், உயர்கல்வி தர மேம்பாடு குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு, மத்திய பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாலகுருசாமி பேசுகையில்,
உயர்க ல்வியின் தரம் பற்றி பல ஆண்டுகளாக பேசி வருகிறோம். ஆனால், தீர்வு கிடைத்தபாடில்லை. நம் நாட்டில் உயர் கல்வியின் தரம் குறைந்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை.
இன்றைய நிலையில் 50 சதவீத பொறியியல் மாணவர்களும், 10 சதவீத கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களும் மட்டுமே பணி புரிய தகுதியுள்ளவர்களாக உள்ளனர்.
பொறியியல் பட்டம் பெறும் மாணவர்களில் 90 சதவீதத்தினர், வாழ்க்கைக்குத் தேவையான முக்கிய விஷயங்களை கையாள்வதில் பின்தங்கியுள்ளனர்.
படித்ததை செயல்படுத்த தெரிய வேண்டும். மாணவர்களின் மதிப்பெண்ணில் கவனம் செலுத்தும் நாம், தனித்திறன் வளர்ப்பில் கோட்டை விட்டு விடுகிறோம்.
இவற்றை செம்மைப்படுத்த, முதலில் பாடத்திட்ட வடிவமைப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். சமுதாய மேம்பாட்டுக்கு உதவுவதாக பாடத்திட்டம் இருக்க வேண்டும். சிறந்த பாடத்திட்டத்தை உருவாக்க இன்றைய ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை என்பது வருந்தத்தக்கது.
பல ஆசிரியர்கள், பாடக் குறிப்புகள் கூட தயாரிக்கத் தெரியாமல் உள்ளனர். அதிலும், நாடு முழுவதும் இன்று 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஒரு மாணவனின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு பல்கலையின் உள்கட்டமைப்பு வசதிகள் முக்கியம் என்பதால் தான் 44 பல்கலைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கல்வி வளாக சுதந்திரம் தேவை. ஆனால் கல்வியின் தரத்துக்கு இந்த சுதந்திரம் உத்தரவாதம் அளிக்காது. ஆராய்ச்சியில் பிற நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது. ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பாலகுருசாமி பேசினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி என்பது நினைவிருக்கலாம்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications