சொத்துக்கு ஆசைப்பட்டு குழந்தைக்கு விஷம் கொடுத்த சித்தி கைது!
திருவள்ளூர்: சொத்துக்கு ஆசைப்பட்டு பச்சிளம் குழந்தையை பூச்சி மருந்து கொடுத்து கொல்ல முயன்ற சித்தி கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாபு (40). இவரது மனைவி கிரிஜா (38). திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
பாபுவின் தம்பி பெயர் ஜெயராமன். இவர் மனைவி ரேகா மற்றும் 10 வயது மகன் ஆகியோருடன் அண்ணன் பாபு வீட்டிலேயே கூட்டு குடும்பமாக வசிக்கிறார்கள்.
பாபுவிற்கு குழந்தை இல்லாததால், அவரின் சொத்து முழுக்க தம்பி ஜெயராமனின் மகனுக்கே சேரும் என அவர்களுக்குள்ளாக தீர்மானித்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் பாபுவின் மனைவி கிரிஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை பராமரிக்கப்பட்டு வந்தது.
நேற்று திடீரென குழந்தையின் வாயில் நுரை தள்ளியது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விசாரித்து பார்த்ததில் பாபுவின் தம்பி மனைவி ரேகா, குழந்தையை கொஞ்சுவது போல நடித்து வாயில் பூச்சிக் கொல்லி மருந்தை திணித்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நர்ஸ் மார்க்கரேட் ஸ்டெல்லா எழும்பூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து ரேகா கைதுசெய்யப்பட்டார்.
ரேகா தான செய்த தவறை போலீசிடம் ஒப்புக் கொண்டார். போலீசிடம் வாக்குமூலம் அளிக்கையில், 'கிரிஜாவுக்கு குழந்தை இல்லாததால் சொத்து முழுவதும் எனது மகனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தேன்.
இந்த நிலையில் கிரிஜா குழந்தை பெற்றது எனக்கு பிடிக்கவில்லை. குழந்தையை எப்படியாவது கொன்றுவிட முடிவு செய்தேன். குழந்தையை பார்க்க வரும்போது கையோடு பூச்சி மருந்தையும் எடுத்துவந்தேன்.
குழந்தையை கொஞ்சுவது போல நடித்து அதன் வாயில் விஷத்தை ஊற்றிவிட்டேன். முதலில் அதை யாரும் பார்க்கவில்லை. குழந்தை மயக்கமானதால் நான் மாட்டிக்கொண்டேன்' என்று தெரிவித்துள்ளார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications