யாருக்கும் ஓட்டுப் போட வேண்டாம் என்று பிரசாரம் செய்யலாம்- உயர்நீதிமன்றம்
சென்னை: யாருக்கும் ஓட்டுப் போடாதீர்கள் என்று கூறி பென்னாகரத்தில் பிரசாரம் செய்ய விவசாயிகள் விடுதலை முன்னணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தப் பிரசாரத்திற்கு போலீஸார் பாதுகாப்பு அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் பென்னாகரம் தாலுகா குழு உறுப்பினர் கோபிநாத் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில்,
பென்னாகரம் தொகுதிக்காக கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் அமைப்பு பாடுபட்டு வருகிறது. தற்போது புதிய பொருளாதார கொள்கைகளாலும், உலக வர்த்தக அமைப்பின் பொருளாதார கொள்கைகளாலும் இந்தியாவில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக ஏறியுள்ளது. இந்த கொள்கைக்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் கைகோர்த்து ஆதரவு தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பென்னாகரம் தொகுதிக்கு வருகிற 27-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
எனவே, இந்த நேரத்தில் இந்த பொருளாதார கொள்கை பற்றியும், மக்களின் நிலை பற்றியும் பொதுமக்களிடம் பேசுவதற்காக 7.3.2010 அன்று பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முடிவு செய்தோம். அந்த கூட்டத்தில், இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் மக்கள் ஓட்டு போடக் கூடாது என்று பிரசாரம் செய்வதற்கு முடிவு செய்தோம்.
எனவே இதற்காக பென்னாகரம் பஸ் நிலையம் அருகே மார்ச் 7-ந் தேதி மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டிடம் அனுமதி கேட்டு 26.2.2010 அன்று விண்ணப்பித்தேன்.
நான் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்ட இடம் தடை செய்யப்பட்ட பகுதி அல்ல. அங்கு கூட்டம் நடத்தப்படுவதால் பொதுமக்களின் அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், நாங்கள் அனுமதி கேட்ட இடம் தடை செய்யப்பட்ட பகுதி என்றும், இதுபோன்ற விண்ணப்பங்களை தேர்தல் நேரம் என்பதால் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மட்டுமே தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி எனது விண்ணப்பத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு நிராகரித்து விட்டார்.
மேலும், இந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட்டால் அது பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார். எனவே, நான் தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தேன். அவர் அந்த விண்ணப்பத்தை மாவட்ட வருவாய் அதிகாரிக்கு அனுப்பி வைத்தார். ஆனால், போலீஸ் துணை சூப்பிரண்டு கூறிய அதே காரணத்தை கூறி எனது விண்ணப்பத்தை மாவட்ட வருவாய் அதிகாரி நிராகரித்துவிட்டார்.
பொதுக்கூட்டம் நடத்தும் தேதியை மாற்றி வேறு தேதியில் நடத்துவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். வாக்குசாவடியில் யாருக்கும் ஓட்டு போடமாட்டோம் என்று பதிவு செய்வதற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ள நிலையில், யாருக்கும் ஓட்டு போடவேண்டாம் என்று பிரசாரம் செய்வதற்கு அனுமதி மறுப்பது நியாயமல்ல.
எனவே, மார்ச் 20-ந் தேதிக்குள் எங்களுக்கு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாட்ஷா, மனுதாரருக்கு அந்த பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அவர் 23-ந் தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிக்குள் பொதுக்கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
கலை நிகழ்ச்சிகளில் ஆபாசமோ, வேறு எந்தவொரு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்பாடோ இருக்கக்கூடாது. இதற்கு போலீசார் தகுந்த ஏற்பாடுகளை செய்யவேண்டும். அந்த ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications