மே மாதம் அமைச்சரவையில் மாற்றம் செய்ய பிரதமர் திட்டம்?

தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி மத்தியில் அமைச்சரவையில் 72 பேர் அமைச்சர்களாக இருக்க முடியும். தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சர்வையில் தற்போது 69 பேர் மட்டுமே உள்ளனர். எனவே மேலும் 3 பேரை சேர்க்க முடியும்.
மன்மோகன் சிங் தலைமையிலான 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்று மே 22ம் தேதியுடன் ஒரு வருடம் முடியப் போகிறது. இதையடுத்து அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த ஒரு ஆண்டு காலத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகளை பிரதமர் ஆய்வு செய்து வருகிறார். அதன் அடிப்படையி்ல் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.
சிலரது செயல்பாடுகள் பிரதமருக்கு கட்டோடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். எனவே அவர்களை நீக்குவது அல்லது இலாகாக்களை பறிப்பது போன்றவற்றில் அவர் ஈடுபடக் கூடும். சிலர் கூடுதல் இலாகாக்களை வைத்துக் கொண்டு அவதிப்படுகிறார்கள். அவர்களின் பணி இலகுவாக்கப்படலாம். புதியவர்கள் அமைச்சரவையில் சேரும் வாய்ப்பும் உள்ளது.
மாற்றப் பட்டியலில் காங்கிரஸ் மட்டுமல்லாமல் தோழமைக் கட்சிகளின் அமைச்சர்களும் இடம் பெறுவார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications