பென்னாகரத்தில் திமுகவே வெல்லும்: வாக்குகள் விலைக்கு வாங்கப்படுகின்றன: லயோலா கல்லூரி சர்வே

பென்னாகரம் இடைத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பை லயோலா கல்லூரியின் ஊடக காட்சியியல் பிரிவு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. முடிவுகளை துறைத் தலைவர் பேராசிரியர் ராஜநாயகம் வெளியிட்டார். ஜனவரி மற்றும் மார்ச் மாதம் என இரண்டு கட்டமாக சர்வே எடுக்கப்பட்டது. அதன் விவரம்:
கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி முதல் 31ம் தேதி முடிய முதல்கட்டமாகவும், மார்ச் மாதம் 19ம் தேதி முதல் 21ம் தேதி முடிய இரண்டாம் கட்டமாகவும் இந்த ஆய்வு நடைபெற்றது. முதல் கட்ட ஆய்வு 45 இடங்களில் 500 பேரிடமும், இரண்டாம் கட்ட ஆய்வு 100 இடங்களில் 1225 பேரிடமும் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. மாணவர்கள், உதவியாளர்கள், களப்பணியாளர்கள் என 20 பேர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
புதிய வாக்காளர்கள் முதல் முதிய வாக்காளர்கள் வரை படித்தவர்கள், கூலித்தொழிலாளர்கள், வன்னியர்கள், பிற சமூகத்தினர் என அனைத்து தரப்பு மக்களையும் இந்த குழு சந்தித்து கருத்து கேட்டது.
உயர்ந்து வரும் திமுக செல்வாக்கு:
இந்த ஆய்வில் திமுகவின் செல்வாக்கு உயர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜனவரி மாத ஆய்வில் 40.1 சதவீதமாக இருந்த திமுகவின் செல்வாக்கு தற்போது 44.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாறாக பாமகவின் செல்வாக்கு 31.8 சதவீதத்திலிருந்து 23.3 சதவீதமாக குறைந்துள்ளது.
அதிமுக செல்வாக்கும் உயர்ந்துள்ளது:
அதே போல அதிமுகவின் செல்வாக்கு 8 சதவீதத்திலிருந்து 15.5. சதவீதமாக 2 மடங்கு உயர்ந்துள்ளபோதிலும், அக்கட்சி இன்னும் மூன்றாம் இடத்திலேயே உள்ளது.
சரிந்த தேமுதிக:
தேமுதிகவின் ஆதரவு 6.1 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக சரிந்துள்ளது. எந்த கட்சிக்கும் ஓட்டு போட மாட்டோம் என்பவர்களின் எண்ணிக்கை 2.5 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதமாக குறைந்துள்ளது.
ஜனவரி மாதத்தில் நடந்த ஆய்வுக்கும், மார்ச் மாத ஆய்வுக்குமிடையே மக்களின் மனப்போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது.
எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பீர்கள்?:
எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு திமுக வேட்பாளருக்கு என்று தெரிவித்தவர்கள் 44.9 சதவீதம் பேராவர்.
2வது இடம் பாமகவுக்கு-3வது இடம் அதிமுகவுக்கு:
இதில் 2வது இடம் பாமகவுக்குக் கிடைத்துள்ளது. அக்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக 23.3% பேரும், அதிமுகவுக்கு ஆதரவாக 15.5% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேமுதிகவுக்குக் கிடைத்துள்ள ஆதரவு 3.5% ஆகும். 10.1 சதவீதம் பேர் இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இன்னும் முடிவு செய்யவில்லை என்று 10.1 சதவீத பேரும் தெரிவித்துள்ளனர்.
விலைக்கு வாங்கப்படும் ஓட்டுக்கள்:
பணம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்குவதாக பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். அதாவது 63% பேர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
கள்ள ஓட்டு போடப்படுவதாக 26.3% பேரும், ஓட்டுப் போடுமாறு கூறி தாங்கள் மிரட்டப்படுவதாக 5.6% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஓட்டுப் போடுவதைத் தடுப்பதாக 3.4 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பணத்துக்கு ஓட்டுப் போடுவது தவறு:
பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுவது தவறு இல்லை என்று 47.4 சதவீத பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் தவறு என்று 49.6 பேர் தெரிவித்துள்ளனர்.
தொகுதியின் முக்கிய பிரச்சனையாக குடிநீர் வசதிதான் கூறப்பட்டுள்ளது. அதாவது 80.6 சதவீதம் பேர் குடிநீர் வசதி இல்லை என்று கூறியுள்ளனர்.
குடிநீர் தான் பெரிய பிரச்சனை:
குடிநீர்ப் பிரச்சனைதான் பென்னாகரம் தொகுதியின் மிக மிக முக்கியப் பிரச்சனையாக இதன் மூலம் தெரிய வருகிறது.
வேலை இல்லா திண்டாட்டம் தான் முக்கிய பிரச்சனை என்று 8.2% பேரும், கழிப்பிட, துப்புறவு வசதி இல்லை என்று 5.4% பேரும், சாலை வசதி இல்லை என்று 3.6% பேரும், தொழில் வளர்ச்சி இல்லை என 2.2 சதவீத பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
திமுகவால்தான் பென்னாகரம் தொகுதி பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என 34.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பாமகவுக்கு ஆதரவாக 21.9 சதவீதம் பேரும், அதிமுகவால் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று 10.6 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். தேமுதிவுக்கு கிடைத்துள்ள ஆதரவு 2 சதவீதம் மட்டுமே.
இதை விட முக்கியமாக, யார் வந்தாலும் எங்களது பிரச்சனை தீராது என்று கிட்டத்தட்ட 31 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இடைத் தேர்தலை ஆதரித்து 42.6 சதவீதம் பேரும், 40.4 சதவீதம் பேர் எதிர்த்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கரைபுரண்டோடும் மது:
தொகுதியில் மதுவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சிறுவர்கள் அதிக அளவில் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை வாக்காளர்கள் முன் வைத்துள்ளனர்.
தேர்தல் கமிஷனின் செயல்பாடு நன்றாக உள்ளது என்று திமுக ஆதரவாளர்கள் 62.2% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிமுகவினர் 40.5%, பாமக 34.7%, தேமுதிக 20% பேர் தேர்தல் கமிஷனின் செயல்பாட்டை பாராட்டியுள்ளனர்.
அதன் செயல்பாடு மோசம் என்று பாமகவை சேர்ந்த 30.5% பேர் கூறுகின்றனர். அதிமுகவில் 16.2% பேரும், தேமுதிகவில் 20% பேரும், திமுகவில் 4.5% பேரும் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.
-
மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூசக பதில்! -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
"திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் எதிர்பார்க்கிறோம்".. கமல்ஹாசன் சொன்ன சேதி! -
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
1,000 மாடல் பள்ளிகள், 7 லட்சம் வீடுகள், தொழில்பூங்கா! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 14 அம்ச அறிவிப்பு -
அதிமுக vs திமுக.. தொழில் துறையில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி என்ன? டேட்டாவுடன் வந்த டிஆர்பி ராஜா! -
தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள்.. 59 ஆண்டுகள் முன் அண்ணா ஆட்சிக்கு வந்த வரலாறு -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை












Click it and Unblock the Notifications