For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பென்னாகரம்-ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் கல்வீச்சு

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
பென்னாகரம்: பென்னாகரத்தில் அதிமுக வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்த போது அவரை நோக்கி கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பென்னாகரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தொகுதியில் தமிழக துணனை முதல்வர் மு.க. ஸ்டாலின் , தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் , அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது கட்சி வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து பிரசாரம் செய்ய பென்னாகரத்திற்கு சேலத்தில் இருந்து புறப்பட்டார்.

அப்போது ஜெயலலிதா சென்ற கார் திடீரென பழுதானது. இந்த கார் வெளிநாட்டு கார் என்பதால், உடனே சரி செய்ய முடியவில்லை.

இதனால் டெம்போ டிராவலர் வேன் மூலம் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜெயலலிதா செல்லும் இடங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

சென்னை திரும்பினார்:

இந் நிலையில் தனது 2 நாள் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட ஜெயலலிதா சென்னை திரும்பினார்.

நேற்றிரவு பிரசாரத்தை முடித்த ஜெயலலிதா 9.30 மணிக்கு கார் மூலம் புறப்பட்டு நள்ளிரவு சென்ன வந்து சேர்ந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X