ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டவர் ஜெ தான்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
பென்னாகரம்: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டது ஜெயலலிதா தான் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
பென்னாகரத்தில் நேற்று இரவு திமுக வேட்பாளர் இன்பசேகரனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் பிரிக்கப்படாமல் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போதே, குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆய்வுப் பணிகள் முடிந்து திட்டத்தை செயல்படுத்தும் நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அப்போது, முதல் அமைச்சராக ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றார். அதன் பிறகு அந்த திட்டத்தை கிடப்பில் போட்டவரே ஜெயலலிதா தான்.
2006ல் ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டத்தை அடுத்து நானும், அதிகாரிகளும் ஜப்பான் சென்று, வங்கி அதிகாரிகளை தமிழகத்திற்கு அழைத்தோம்.
இதனையடுத்து, தமிழகத்தில் ஆய்வு செய்த ஜப்பான் நாட்டு அதிகாரிகள், நிதி தர சம்மதித்தனர்.
தமிழகத்தில் வறண்ட மாவட்டமாக உள்ள ராமநாதபுரத்திற்கு கூட்டு குடிநீர் திட்டத்தை முடித்துக் கொடுத்தவர் தமிழக முதல்வர் கருணாநிதி. அதே போன்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமும் தர்மபுரி மாவட்ட மக்களுக்கு கிடைக்கும்' என்றார்.












Click it and Unblock the Notifications