Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேரூராட்சி அலுவலகத்தில் பத்திரிகை நிருபர் தாக்கப்பட்டார் - மதிமுக கவுன்சிலருக்கு வலை

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்: செய்தி சேகரிக்க சென்ற தினமலர் நிருபர் மீது மதிமுக கவுன்சிலர் ரவி ஆபாசமாக திட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் அரசு திட்டங்களுக்காக சிமென்ட் மூட்டைகள் பயன்படுத்தப்படாமல் கிடந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இந்த நிலையில், பேரூராட்சியில் அலுவலகத்தில் நடைபெற்ற டெண்டர் குறித்த செய்தி சேகரிக்க தினமலர் நிருபர் செல்வராஜ் சென்றுள்ளார்.

அவரை கண்டதும் ஆவேசம் அடைந்த மதிமுக நகரச் செயலாளரும், 9 வது வார்டு பேரூராட்சி கவுன்சிலருமான ரவி (எ) ராஜகோபால், ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலை எதிர்பாரத செல்வராஜ் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு முதலுதவி அளித்தபின் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து செல்வராஜ், புவனகிரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால் நிருபரை தாக்கிய மதிமுக கவுன்சிலர் ரவியை தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+