Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தும் ரிசர்வ் வங்கி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மத்திய ரிசர்வ் வங்கி மீண்டும் பணக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்க உள்ளது.

சிஆர்ஆர் உள்ளிட்ட அனைத்து விகிதங்களிலும் மீண்டும் ஒரு மாறுதலைக் கொண்டுவரும் திட்டமுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கூறினார்.

"ஒரு சில வளர்ச்சிப் பணிகளை நாம் தியாகம் செய்ய வேண்டி வரலாம். ஆனால் உயரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இதுவே சரியான தருணம்..." என்று கூறியுள்ளார் சுப்பாராவ்.

உலகில் மற்ற நாடுகளை விட இந்தியா மிக விரைவில் மீட்சிப் பாதைக்கு வரக் காரணமே பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்ததே. எனவே மீண்டும் அதுபோன்றதொரு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அவசியம், என்கிறார் சுப்பாராவ்.

ரொக்க விகிதம், வங்கி வட்டி போன்ற அனைத்து பணவியல் கட்டுப்பாட்டு ஆயுதங்களையும் மீண்டும் பிரயோகிக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ரொக்க இருப்பு விகிதம், ரெபோ ரேட் போன்றவற்றில் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் 25 புள்ளிகள் அடிப்படையில் உயர்த்தப்பட்டது. மீண்டும் அடுத்த வாரம் இதே அளவு உயர்வு அறிவிக்கப்படும் என்கின்றனர் ரிசர்வ் வங்கி நிபுணர்கள்.

இப்போது பணவீக்கத்தின் அளவு 9.89 சதவிகிதமாக உள்ளது. சில மாதங்கள் முன்பு வரை இது மைனஸில் இருந்தது நினைவிருக்கலாம். அன்று, இது சரியான அளவல்ல என்று கூறி, உணவுப் பொருள் பணவீக்கத்தை மட்டும் முக்கிய அளவீடாகக் கொண்டது நிதித்துறை. இப்போது, மீண்டும் பழையபடி மொத்த விலைக் குறியீட்டெண்ணை கணக்கில் காட்ட முயல்வதும் கவனிக்கத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+