8ம் வகுப்பு படித்துவிட்டு 'கிளினிக்' நடத்திய போலி டாக்டர்கள் கைது!

டாக்டர்கள் எனக்கூறி மருத்துவம் பார்த்து வந்த மோசடி ஆசாமிகள் இருவரும் முறையே 8, 10ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளது தெரியவந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, வீரவநல்லூர், பத்தமடை உள்ளிட்ட பகுதிகளில் போலி டாக்டர்கள் இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இந்நிலையில், வீரவநல்லூரில் நாகர் சன்னதி தெருவில் கிளினிக் நடத்தி வரும் சத்யன் என்பவரிடம் வயிற்று போக்கால் அவதிப்பட்டு வந்த குட்டிகாலனியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் சிகிச்சைக்காக சென்றார்.
அவர் அளித்த சிகிச்சையில் பஞ்சவர்ணத்தின் கால் வீங்கியது. இதேபோல் மாரியப்பன் என்பவர் வீரவநல்லூர் ரயில்வே பீடர் ரோட்டில் கிளினிக் நடத்தி வரும் நம்பிராஜன் என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றார்.
சிகிச்சையில் மாரியப்பனுக்கும் கால் வீங்கி, உடலில் அலர்ஜி ஏற்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த இருவரும் வீரவநல்லூர் போலீசில் தனி தனியாக புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் போலி டாக்டர் சத்யன், நம்பிராஜன் ஆகியோரை கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சத்யன் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என தெரிந்தது.
அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக இருந்ததும், பின்னர் வீட்டிலேயே கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரிந்தது.
நம்பிராஜன் 10ம் வகுப்பு முடித்து மோர்மடம் என்ற பகுதியில் மீனா கிளினிக் என்ற பெயரி்ல் கிளினிக் வைத்து பலருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications