அணு ஆயதம் ஏந்தும் அதிநவீன ஏவுகணைகள்-இந்தியா வெற்றிகரமாக சோதனை!
பாலாசூர்: அணுஆயும் ஏந்திச் செல்லும் அதிநவீன ஏவுகணைகளான தனுஷ் மற்றும் பிரித்வி-II சோதனைகளை இன்று அதிகாலை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள பாலாசூர் மாவட்டம் சண்டிப்பூர் தளத்தில் இருந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டதாக தளத்தின் இயக்குனர் எஸ்.பி.டாஷ் கூறினார்.
சுமார் 350 கிமீ தொலைவு வரை, தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை சென்று தாக்கும் சக்தி படைத்த பிரித்வி-II ஏவுகணை சாண்டிப்பூர் தளத்தில் இருந்தும், இதேபோல் கடலில் இருந்து எதிரி இலக்கை தாக்கக்கூடிய தனுஷ் கடற்படை கப்பலில் இருந்தும் சோதனைக்காக ஏவப்பட்டன.
முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி ஏவுகணை, 500 கிலோ அளவுக்கு ஆயுதங்களை ஏந்திச்செல்லவும், 43.5 கிமீ உயரத்திற்கும் செல்லவும், இலக்கு தூரத்தை 483 நொடிகளில் கடக்கும் திறனும் பெற்றது.












Click it and Unblock the Notifications