கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் - குஷ்பு பேச்சை நியாயப்படுத்தும் சுப்ரீம் கோர்ட் கருத்து: மடாதிபதிகள் க
ஹைதராபாத்: குஷ்பு பேசிய பேச்சை நியாயப்படுத்தும் வகையில், ராதையையும், கிருஷ்ணரையும் இழிவுபடுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது என்று மேலும் பல மடாதிபதிகள் கூறியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா ஸ்ரீபீடம் பூர்னானந்த சரஸ்வதி சுவாமி கூறுகையில், நீதிபதிகளின் தீர்ப்பு மீது யாரும் கருத்து கூற முடியாது. ஆனால் திருமணத்துக்கு முன்பு உறவு வைத்துக் கொள்வது தவறல்ல என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருப்பது இந்து மதத்தை, இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது. அத்துடன் கிருஷ்ணன்-ராதை உறவை மேற்கொள்காட்டியுள்ளனர். இதுவும் இந்து மதத்தை புண்படுத்தி இருக்கிறது. ராதா-கிருஷ்ணர் பற்றி முழுமையாக தெரிந்து பேச வேண்டும்.
இதுகுறித்து மாற்று கருத்தை கோர்ட்டு வெளியிட வேண்டும். இது பற்றி குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம் என்றார்.
அதேபோல ஆந்திராவைச் சேர்ந்த குர்தாலம் பீடாதிபதி ஸ்ரீசித்தேஸ்வர ஆனந்த பாரதி கூறுகையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ராதா-கிருஷ்ணர் பற்றி கருத்து தெரிவித்து இருப்பது தவறு. திருமணம் செய்யாமல் வாழ்ந்தார்கள் என்று கூறுவது எங்களை காயப்படுத்துகிறது.
அவர்களுக்கிடையே என்ன உறவு இருந்தது என்பதை தெரிந்து கொள்ளாமல் மதத்தை காயப்படுத்தும் விதமாக சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்து இருப்பது வேதனை தருகிறது.
பிருந்தாவன சாஸ்திரப்படி ராதா-கிருஷ்ணர் ஆதி தம்பதிகள். இவர்கள் தான் சிவன், மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோரை சிருஷ்டித்தார்கள். ராதாவுக்கு 11 வயதும், கிருஷ்ணருக்கு 8 வயதும் இருக்கும் போது காதல் இருந்தது. அவர்கள் அப்போதும் சேர்ந்து வாழ வில்லை என்று கூறினார்.
-
சுந்தர்.சி-க்கு அரசியல் தெரியாதா? மதுரை மத்திய தொகுதி மக்கள் மிரளப் போறாங்க.. பில்டப் ஏற்றும் குஷ்பு -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு?












Click it and Unblock the Notifications