காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 4 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு: காஷ்மீர் எல்லையில் ராணுவத்தினர் உடனான சண்டையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்முவில் இருந்து சுமார் 146 கிமீ தொலைவில், ரஜௌரி மாவட்டத்தில் தர்மசாலா வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்பி ஆர்.கே.பட் தலைமையிலான போலீசார் மற்றும் ராணுவப் படையினர் இணைந்து வனப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி. தீவிரவாதிகளை சுற்றிவளைக்க திட்டமிடப்பட்டது.
இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் சென்ற போது, வனப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதலை தொடங்கினர்.
பாதுகாப்பு வீரர்களும் திருப்பிச் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இருவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மொத்தம் ஆறு முதல் ஏழு தீவிரவாதிகள் வரை எல்லையில் ஊடுருவி, இந்த வனப்பகுதியில் தஞ்சம் புகுந்திருக்கக் கூடும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தப்பியோடியவர்களை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications