For Quick Alerts
For Daily Alerts
Just In
அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் அக்னி-1 ஏவுகணை ஏவி பரிசோதனை
ஒரிசா மாநிலம் வீலர் தீவிலிருந்து இன்று பிற்பகல் 1 மணியளவில் அக்னி-1 ஏவுகணை ஏவி சோதிக்கப்பட்டது.
நடமாடும் லாஞ்சர் மூலம் அக்னி-1 ஏவப்பட்டது. தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை. திட எரிபொருளால் இயங்கும் இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டதாகும்.
இந்த சோதனை குறித்த புள்ளிவிவரத் தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் ஏவி பரிசோதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, March 28, 2010, 15:06 [IST]