விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: தா.பாண்டியன் வலியுறுத்தல்
செங்கோட்டை: வறட்சியாலும், வன விலங்குகளாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் இன்று செங்கோட்டை பொதுபணித்துறை விருந்தினர்கள் மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் வறட்சி தொடங்கிவிட்டது. அதற்கு உதாரணம் முதுமலை வனவிலங்கு சாரணாலயத்தில் குடிநீர் கூட இல்லாததால் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
அதுபோல் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களை கண்டறிந்து, குறிப்பாக தென்மாவட்டங்களில் நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வறட்சியாலும், வனவிலங்குளாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
குடிதண்ணீர் இன்றி சில சாவுகளும் நடந்துள்ளதாக கிராமங்களில் மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் படுகொலை என்பது தினமும் நடக்கும் நிகழ்வாகி விட்டது.
கடந்த 2009ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் 72 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் கம்யூனிஸ்ட் தோழர்களும் அடக்கம். 2010ல் இதுவரை 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இக்கொலைகள் தமிழகம் முழுவதும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய, மாநில பட்ஜெட்டிற்கு பின் விலைவாசி வெகுவாக உயர்ந்துள்ளது. எந்த விலைவாசியும் கட்டுக்குள் வரவில்லை.
மின் பாற்றாக்குறையால் சிறிய, நடுத்தர தொழில்கள், விவசாயம் முற்றிலும் சீரழிக்கப்பட்டுள்ளது. அரசு இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாய நிலங்களை அமெரிக்க நிறுவனம் நீண்ட ஓப்பந்தம் மூலம் பயிர் செய்வதற்கு குத்தகைக்கு எடுத்து கொள்ளலாம் என்ற உத்தேச மசோதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக எதிர்க்கிறது' என்றார்.












Click it and Unblock the Notifications