நளினி குறித்து சோனியா காந்தி மெளனம் சாதிப்பது வியப்பளிக்கிறது-சாமி
சென்னை: நளினி விடுதலை விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெருத்த மெளனம் காப்பது வியப்பாக உள்ளது என்று கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி.
கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி 1405 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மதுரை பெண் கவுன்சிலர் லீலாவதியைக் கொடூரமாக கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற திமுகவினரும் அடக்கம்.
இதை எதிர்த்து சுப்ரமணியம் சாமி வழக்கு தொடர்ந்தார். அதில், லீலாவதி கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் விடுதலையாகி உள்ளனர். 14 ஆண்டுக்கும் குறைவாக 2, 3, 5 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் எல்லாம் விடுதலையாவது சட்ட விரோதம் ஆகும். எனவே இந்த விடுதலை செல்லாது என அறிவிக்கவேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கில் அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை அரசு பதில் தரவில்லை. இது குறித்து சுப்பிரமணிய சாமி இன்று உயர்நீதிமன்றத்திற்கு நேரில் வந்து தலைமை நீதிபதி எச்.எல். கோகலேவிடம் முறையிட்டார்.
தலைமை நீதிபதி முன்பு ஆஜரான தமிழக அரசின் பி.எஸ். ராமனிடம் இன்னும் 2 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
பின்னர் வெளியில் வந்த சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், 14 ஆண்டுகளுக்கு குறைவாக சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகளை விடுவிக்கக் கூடாது என்று கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதை நீதிபதியிடம் தெரிவித்துள்ளேன்.
கோர்ட்டால் தண்டனை பெறும் கைதிகளை அரசியல்வாதிகளின் சிபாரிசால் விடுதலை செய்வது சட்ட விரோதம் ஆகும். நளினி விடுதலை விவகாரத்தில் சோனியா காந்தியும், மத்திய அரசும் மவுனம் காப்பது ஆச்சரியம் அளிக்கிறது என்றார் சாமி.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications