ஆன்லைன் ரயில் டிக்கெட் சேவைக் கட்டணம் நாளை முதல் குறைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இ டிக்கெட் எனப்படும் ஆன்லைன் ரயில் டிக்கெட் சேவைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது.

ரயில்வே பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி ஏப்ரல் 1ம் தேதியான நாளை முதல் இது அமலுக்கு வருகிறது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இணையதளம் மூலம் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் இ-டிக்கெட் முன்பதிவு செய்வது நாடு முழுவதும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தினசரி நடைபெறும் ரயில்வே முன்பதிவில் 35 சதவீதம் ஆன்லைன் மூலம்தான் நடைபெறுகிறது. இன்டர்நெட் வசதி இருந்தால் மட்டும் போதும். தினசரி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த சேவையை எங்கிருந்தபடியும் பெற முடியும்.

இந்தச் சேவையை வழங்குவதற்காக ஐஆர்சிடிசி நிறுவனத்துக்காக சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்போது இந்தக் கட்டணம்தான் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண விகிதப்படி, தூங்கும் வசதியுள்ள இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட்டில் அதிகபட்சம் 6 பேருக்கு முன்பதிவு செய்யலாம். இதற்கான சேவை கட்டணம் இனி ஒரே சீராக ரூ. 10 மட்டுமே வசூலிக்கப்படும்.

பகல் நேரத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் உள்ள சேர் கார் பெட்டிகள், 3 அடுக்கு ஏசி, முதல் வகுப்பு, 2 அடுக்கு ஏசி, முதல் அடுக்கு ஏசி வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்ய இனி சேவை கட்டணம் ரூ. 20 மட்டுமே சீராக வசூலிக்கப்படும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் இ}டிக்கெட் பெறுவது குறித்து பல்வேறு தகவல்களை அறிய 24 மணி நேரமும் செயல்படும் ஐ.ஆர்.சி.டி.சி. (ஹெல்ப் லைன்) தொ.பே. எண் 044}2530 0000 ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+