Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலாவதி மருந்து வழக்கில் கைதான மீனாட்சி சுந்தரம் மீது வக்கீல்கள் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

Meenakshi Sundaram
சென்னை: காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முக்கியப் புள்ளி மீனாட்சி சுந்தரம் இன்று சென்னை கோர்ட்டில் வக்கீல்களால் தாக்கப்பட்டார்.

காலாவதி மருந்துகளை தனது மீனா ஹெல்த்கேர் நிறுவனம் மூலம் விற்ற மீனாட்சி சுந்தரம் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரையும், சேகர் என்பவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தை அணுகினர். இதற்காக இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது இருவரையும் 6 நாள் போலீஸ் காவலில் அனுமதித்து கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து இருவரையும் போலீஸார் வெளியில் அழைத்து வந்தனர். அப்போது வக்கீல்கள் சிலர் திரண்டு வந்து இருவரையும் தாக்க முயன்றனர். அதில் மீனாட்சி சுந்தரம் வக்கீல்களிடம் சிக்கிக் கொணடார். அவர் மீது சரமாரியாக அடி விழுந்தது.

இதையடுத்து போலீஸார் உள்ளே புகுந்து மீனாட்சி சுந்தரத்தை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்து அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபோல சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வக்கீல்கள் கோர்ட்டில் தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல. முன்பு உயர்நீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சாமி வந்தபோது அவர் மீது முட்டைகளை வீசித் தாக்குதல் நடந்தது. இந்த மோதல்தான் மிகப் பெரிய கலவரத்திற்கு வித்திட்டது என்பது நினைவிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+