காலாவதி மருந்து வழக்கில் கைதான மீனாட்சி சுந்தரம் மீது வக்கீல்கள் தாக்குதல்

காலாவதி மருந்துகளை தனது மீனா ஹெல்த்கேர் நிறுவனம் மூலம் விற்ற மீனாட்சி சுந்தரம் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரையும், சேகர் என்பவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தை அணுகினர். இதற்காக இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இருவரையும் 6 நாள் போலீஸ் காவலில் அனுமதித்து கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து இருவரையும் போலீஸார் வெளியில் அழைத்து வந்தனர். அப்போது வக்கீல்கள் சிலர் திரண்டு வந்து இருவரையும் தாக்க முயன்றனர். அதில் மீனாட்சி சுந்தரம் வக்கீல்களிடம் சிக்கிக் கொணடார். அவர் மீது சரமாரியாக அடி விழுந்தது.
இதையடுத்து போலீஸார் உள்ளே புகுந்து மீனாட்சி சுந்தரத்தை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்து அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபோல சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வக்கீல்கள் கோர்ட்டில் தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல. முன்பு உயர்நீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சாமி வந்தபோது அவர் மீது முட்டைகளை வீசித் தாக்குதல் நடந்தது. இந்த மோதல்தான் மிகப் பெரிய கலவரத்திற்கு வித்திட்டது என்பது நினைவிருக்கலாம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications