லாரி ஸ்டிரைக் ஒத்திவைப்பு!

டீஸல் விலையேற்ற வாபஸ் உள்ளிட்ட சில கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசு முன்வராததால் குறிப்பிட்ட அவகாசத்துக்குப் பிறகு மீண்டும் லாரி ஸ்ட்ரைக் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் வருகிற 5-ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். கேஸ் லாரி உரிமையாளர்களும் இதற்கு ஆதரவளித்துள்ளனர். இந்த ஸ்ட்ரைக் நடந்தால் நாடே ஸ்தம்பித்துப் போகும் அபாயம் உள்ளது. எனவே லாரி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு முன்வந்தது.
அதன்படி, நேற்று மாலை 5.30 மணிக்கு மத்திய அரசின் சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தில் இப் பேச்சுவார்த்தை தொடங்கியது. சாலைப் போக்குவரத்து அமைச்சர் கமல்நாத் தலைமை தாங்கினார். அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தலைமையிலான நிர்வாகிக கலந்து கொண்டனர். அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், பேச்சு இன்றும் தொடர்ந்தது.
இன்றைய பேச்சுவார்த்தையில் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் சிலவற்றை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால் டீஸல் விலை உயர்வை திரும்பப் பெறுவதையும் இன்னும் சில கோரிக்கைகளையும் ஏற்கவில்லை.
எனவே பேச்சுவார்த்தையை இத்துடன் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ள மோட்டார் காங்கிரஸ், விரைவில் முழுமையான உடன்பாடு எட்டப்படும் என நம்புவதாகவும், அதற்கு வசதியாக இப்போதைய லாரி ஸ்ட்ரைக் திட்டத்தை ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தது.
உடன்பாடு எட்டப்படாவிட்டால், வேறு தேதியில் இதே ஸ்ட்ரைக் நடக்கும் என்றும் எச்சரித்துள்ளது மோட்டார் காங்கிரஸ்.
லாரி ஓட்டுநர்கள் எதிர்ப்பு!
இதற்கிடையே, குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படித்துள்ளவர்களுக்கு மட்டுமே லாரி ஓட்டுநர் உரிமம் கொடுக்கப்படும் என்ற விதிமுறையை வாபஸ் பெற வேண்டும் என்று அகில இந்திய லாரி ஓட்டுநர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாளை மறுதினம் நடக்கும் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் திட்டமிட்டபடி ஸ்ட்ரைக் தொடரும் என்று அறிவித்துள்ளது அந்த அமைப்பு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications