2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கியது

கிட்டத்தட்ட 100 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் மாபெரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. இந்த பிரமாண்டப் பணியில் 25 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் வீடு வீடாக சென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர்கள் இப்பணியை மேற்கொள்ளவுள்ளனர்.
ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒரு முறை சென்சஸ் எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு எடுக்கப்படும் கணக்கெடுப்பு பயோமெட்ரிக் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. 15 வயதுக்கு மேற்பட்டோர் குறித்த தகவல்களை சேகரிப்பதோடு அவர்களது கைரேகையும் பதிவு செய்ய்படும். புகைப்படமும் எடுக்கப்படும்.
மக்கள் தொகைக்க் கணக்கெடுப்பு இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து தொடங்கியது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகள் சந்தித்து விவரங்களை சேகரித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், செயலாளர் ஜி.கே.பிள்ளை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியை சந்தித்து கணக்கெடுப்பு நடந்த்து.
இந்தியாவில் எடுக்கப்படும் 15வது மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 1872ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது சென்சஸ் கணக்கெடுப்பு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications