2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கியது

கிட்டத்தட்ட 100 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் மாபெரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. இந்த பிரமாண்டப் பணியில் 25 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் வீடு வீடாக சென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர்கள் இப்பணியை மேற்கொள்ளவுள்ளனர்.
ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒரு முறை சென்சஸ் எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு எடுக்கப்படும் கணக்கெடுப்பு பயோமெட்ரிக் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. 15 வயதுக்கு மேற்பட்டோர் குறித்த தகவல்களை சேகரிப்பதோடு அவர்களது கைரேகையும் பதிவு செய்ய்படும். புகைப்படமும் எடுக்கப்படும்.
மக்கள் தொகைக்க் கணக்கெடுப்பு இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து தொடங்கியது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகள் சந்தித்து விவரங்களை சேகரித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், செயலாளர் ஜி.கே.பிள்ளை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியை சந்தித்து கணக்கெடுப்பு நடந்த்து.
இந்தியாவில் எடுக்கப்படும் 15வது மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 1872ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது சென்சஸ் கணக்கெடுப்பு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications