புலிகள் தொலைக்காட்சி பொறுப்பாளர் சேரலாதன் உயிருடன் உள்ளார் !
மதுரை : இலங்கை போரில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் சேரலாதன் உயிருடன் உள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவு இணைய தளம் 'நிதர்சனம்'.
இந்த இணையதளத்தில் இலங்கை ராணுவத்திற்கும் , விடுதலைப்பலிகளுக்கும் இடையே நடைபெற்ற போர் குறித்த நிகழ்வுகளையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தது.
இந்த தளம் மற்றும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளரான சேரலாதன் செயல்பட்டு வந்தார். இவர் இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், தற்போது சேரலாதன் உயிருடன் உள்ளார்.
இலங்கை ராணுவத்துடனான இறுதிக்கட்ட போரில் சேரலாதனுக்கு காலில் காயம் அடைந்தாகவும் , இதனால், இவர் சக போராளியிடம் தான் குப்பி கடிக்கப் போவதாகவும், தன்னை விட்டுவிட்டு போகுமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இதன் காரணமாக சமர்க்களத்தில் நின்ற போராளிகள் அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டனர். ஆனால் இவர் குப்பியை கடிப்பதற்கு முன்பாகவே கடும் ரத்தப்போக்கால் மயக்கமடைந்து விட்டாராம்.
அப் பகுதிக்கு வந்த ராணுவம் இவரை தூக்கிச் சென்று பல மாதங்களாக தீவிர சிகிச்சை அளித்துள்ளது.
இதனையடுத்து சுயநினைவு திரும்பிய சேரலாதன், தான் நிதர்சனப் பொறுப்பாளர் என தன்னை அடையாளம் காட்டியுள்ளார்.
இதயடுத்து அவர் தற்போது இலங்கை ராணுவத்தின் புலிகளுக்கான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications