திமுகவுக்குள் எந்த சலசலப்பும் இல்லை – மு.க.ஸ்டாலின்

கோவையில் வரும் ஜூன் 23ம் தேதி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கவுள்ளது. மாநாட்டுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
பணிகளை நேரில் ஆய்வு செய்ய துணை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 7.40 மணிக்கு கோவைக்கு வந்தார்.
செம்மொழி மாநாட்டுப் பணி நடக்கும் பல்வேறு இடங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்தார்
பின்னர் செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தபோது திமுகவில் மு.க.அழகிரியால் ஏற்பட்டுள்ள சலசலப்பு குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், திமுகவில் எந்தவிதமான சலசலப்பும் கிடையாது. உங்களிடம் தான் சலசலப்பு உள்ளது என்றார்.
பென்னாகரம் இடைத் தேர்தல் முடிவு குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், மக்கள் திமுகவின் மீது வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே பென்னாகரத்தில் கிடைத்த வெற்றி. இது ஆட்சிக்குக் கிடைத்த நூற்றுக்கு நூறு மதிப்பெண் ஆகும் என்றார்.












Click it and Unblock the Notifications