திருவண்ணாமலை அருகே பைக் மீது பஸ் மோதி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இன்று பிற்பகலில் பைக் மீது தனியார் பேருந்து மோதி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னாடு என்ற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த பைக் மீது பேருந்து மோதியது.
பேருந்து மோதிய வேகத்தில் பைக்கில் வந்து கொண்டிருந்த மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியானவர்களின் சடலத்தை கைப்பற்றி, அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications