திருச்சியில் ஏப். 11ல் இளைஞர் காங். தலைவர் தேர்தல் – ராகுல் வருகை

தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி இத்தேர்தல் தொடங்கியது.
முதலில் கிராமப் பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அளவிலான தேர்தல் நடந்த்து. இதையடுத்து 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் பிரதிநிதிகள் தேர்தல் நடந்தது. பெரும் பரபரப்பு, கலாட்டாக்கள், அரிவாள் வெட்டு, அடிதடிக்கு மத்தியில் இந்தத் தேர்தல் முடிந்துள்ளது.
அடுத்து இறுதிக் கட்டமாக மாநிலத் தலைவர் மற்றும் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தலைவர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் திருச்சியில் வருகிற 11ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான மனுத் தாக்கல் 5ம் தேதி திங்கள்கிழமை தொடங்குகிறது. தமிழகத்தின் மையப் பகுதியாக திருச்சி இருப்பதால் அனைவரும் வந்து செல்ல வசதியாக இருக்கும் என்று அங்கு தேர்தல் நடைபெறவுள்ளதாம். மொத்தம் 4680 பேர் இதில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
இந்த தேர்தலை ராகுல் காந்தியே நேரடியாக வந்து பார்வையிடவுள்ளாராம். இதனால் காங்கிரஸ் வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.












Click it and Unblock the Notifications