For Daily Alerts
Just In
விடுமுறையில் போனார் நீதிபதி பி.டி. தினகரன் – புதிய தலைமை நீதிபதி லோகுர்
நில ஆக்கிரமிப்பு மற்றும் விதிகளை மீறி சொத்துக்களைக் குவித்தது உள்ளிட்ட புகார் களில் சிக்கியதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பை இழந்தார் தினகரன்.
இந்த நிலையில் அவரை விடுமுறையில் செல்லுமாறு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான உச்சநீதிமன்ற காலேஜியம் உத்தரவிட்டது.
அதை ஏற்று இன்று நீண்ட விடுமுறையில் சென்றார் பி.டி.தினகரன். சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாத்த்திலிருந்தே நீதிபதிப் பணியை ஆற்றாமல் ஒதுங்கியிருந்தார் தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கர்நாடக உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வரும் நீதிபதி மதன் பி. லோகூர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.
Comments
Story first published: Saturday, April 3, 2010, 12:48 [IST]