தாறுமாறாக ஓடி பஸ் ஸ்டாப்பில் மோதிய கார் – 2 மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே தாறுமாறாக ஓடிய கார் பஸ் நிறுத்தத்தில் மோதி நின்றது. இதில் காரில் இருந்த 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து கல்லூரி மாணவர்கள் சிலர் கார் மூலம் பழவேற்காடுக்கு சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று காலை, கவரப்பேட்டை புதுவாயல் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்த்து. அப்போது திடீரென கார் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பில் மோதியது. இதில் காரில் இருந்த மாணவர்களில், கஜபதி, ஜெய் ஆகிய இருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரும் விமானப் பணியாளர் பயிற்சிக் கல்லூரியில் படித்து வந்தவர்கள் ஆவர்.
விபத்தில் காரில் இருந்த பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
--












Click it and Unblock the Notifications