மகாத்மா காந்திக்குக் கோவில் – குஜராத் அரசு முடிவு

குஜராத் மாநிலம் உருவாகி ஏப்ரல் மாதம் 30ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, குஜராத்தில் பல்வேறு விழாக்களை அம்மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
இதில் கலந்துகொள்ள, தமிழத்தில் வசிக்கும் குஜராத்தியர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக, குஜராத் மாநில சமூக நல மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பக்கிரிபாய் வகேலா தலைமையில் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் தமிழகம் வந்துள்ளனர்.
அமைச்சர் பக்கிரிபாய் வகேலா ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
குஜராத்தில் நடக்கும் 50வது ஆண்டு விழாவில், இந்தியா முழுவதும் வசிக்கும் குஜராத் மக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
குஜராத்தில் விளைநிலங்கள் விற்கப்பட்டாலும், விவசாயத்திற்கென ஒதுக்கப்பட்ட நிலத்தில், அதிகளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. குஜராத்தில் மகாத்மா காந்திக்கு கோயில் கட்ட திட்டமிட்டுள்ளோம்.
ராவணனிடம் இருந்து ராமரால் மீட்கப்பட்ட சீதை, தீயில் இறங்கி கற்பை நிலைநாட்டியது போல், முதல்வர் மோடியும் தனது மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என நிருபிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறைய உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications