சோமாலியா கடல் கொள்ளையர்களிடம் சிக்கிய 100 இந்தியர்களில் 15 பேர் விடுவிப்பு!
டெல்லி: சோமாலியா கடல் கொள்ளையர்களிடம் சிக்கியிருந்த எட்டு இந்திய சிறிய ரக கப்பல்களில் ஒன்று மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட சுமார் 100 இந்தியர்களில் 15 பேர் மட்டும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சோமாலியா கடலோரத்தில் ஏடென் வளைகுடா பகுதியில் கடந்த 28ம் தேதி எட்டு இந்திய கப்பல்கள் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டன.
இவற்றில் மொத்தம் சுமார் 100 இந்தியர்கள் இருந்தனர். கப்பல்களையும், அதில் உள்ளவர்களையும் பத்திரமாக மீட்பது குறித்து இந்திய அரசு தரப்பில் சோமாலிய அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், 15 பேருடன் கொண்ட ஒரு கப்பலை மட்டும் கடல் கொள்ளையர்கள் விடுவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள கட்ச் வாஹன்வதி சங்கத்தின் தலைவர் கசம் அலி இத்தகவலை இன்று தெரிவித்தார். சோமாலி கடல் கொள்ளையரால் விடுவிக்கப்பட்ட 15 பேரும் கப்பலில் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
கடல் கொள்ளையரிடம் சிக்கியவர்கள் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சரக்கு ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications