ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு சப்ளை ஆன போலி மருந்துகள் – தனிப்படை விரைகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைதராபாத்திலிருந்து பெருமளவிலான போலி மருந்துகள் சென்னைக்கு சப்ளை ஆகியதாக சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்குள்ள கும்பலைப் பிடிக்க ஹைதராபாத்துக்கு ஒரு தனிப்படை விரைகிறது.

காலாவதி மற்றும் போலி மருந்து விற்பனை தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ள சிபிசிஐடி போலீஸார், 3 பேரைக் கைது செய்துள்ளனர்.

அவர்களில் ஒருவரான சீனிவாசன் என்பவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ஹைதராபாத்திலிருந்து பெருமளவில் போலி மருந்துகள் சென்னைக்கு சப்ளை ஆனதாக தகவல்கள் தெரிய வந்தது

இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள கும்பலைப் பிடிக்க தனிப்படை போலீஸார் ஆந்திரா விரைந்துள்ளதாக கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதே கும்பல், காலாவதி மருந்துகளையும் சப்ளை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும, மீனாட்சி சுந்தரத்திற்கும் இந்தக் கும்பலுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இதற்கிடையே, மீனாட்சி சுந்தரத்தின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவதால் அவர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது அவரை தங்களது காவலில் ஒப்படைக்க்க் கோரி சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+