சமூக விரோதிகளால் கொல்லப்பட்ட ஊராட்சி தலைவர் தம்பிக்கு அரசு பணி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் தம்பிக்கு அரசு பணி வழங்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் அருகே மாங்குடி ஊராட்சிமன்ற தலைவராக இருந்த ஜெயக்குமார் கள்ளச்சாராயத்தை ஒழிக்க பல தீவிர முயற்சிகளை மேற்கொண்டவர்.
குடியரசு தலைவரின் நிர்மல் கிராம புரஸ்கார் விருது பெற்ற அவர், சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
அவரின் குடும்ப நிலை ஏழ்மையில் வாடுவதால், ஜெயக்குமாரின் தம்பி பாஸ்கரனுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் காலியாகவுள்ள ஓட்டுநர் பணியிடத்தில் நியமனம் வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications