எந்த சக்தியாலும் அதிமுகவை அழிக்க முடியாது – எஸ்.எஸ்.சந்திரன்

செங்கோட்டையில் கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி அன்று அதிமுகவின் சார்பில் வாகை மரத்தடி முன்பு பொது கூட்டம் நடைபெற்றது.
இந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் எஸ்எஸ் சந்திரன் பேசினார். அப்போது தமிழக முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக மாநில பேச்சாளர் கு.சாட்டையடி சக்திவேல் செங்கோட்டை போலீசில் மறுநாள் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் 16ம் தேதி அன்று செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கு நேற்று செங்கோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி முன்பு நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் ஆஜாரானார். இவ்வழக்கின் விசாரணையை ஜூலை மாதம் 5ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
முன்னதாக அவரை நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் பி.செந்தூர் பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சண்முக சுந்தரம், வழக்கறிஞர் மாடசாமி பாண்டியன் ஆத பாலசுப்பிரமணியன், கார்த்திகேயன், முத்துகுமார், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மாரியப்பன், நடராஜன், முருகையா, அச்சன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான் உள்பட ஏராளமான அதிமுகவினர் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.எஸ்.சந்திரன் பேசுகையில், எந்த சக்தியாலும் அதிமுகவை அழிக்க முடியாது. நிச்சயமாக தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலரும் என்றார்.












Click it and Unblock the Notifications