Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டிஸ்கரில் நக்சல்கள் அட்டகாசம்- 75 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

Chhattisgarh
ராய்ப்பூர்: சட்டிஸ்கர் மாநிலம், தான்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 75 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை சுமார் 6 மணியளவில், முக்ரானா வனப் பகுதியில் உள்ள சாலையில் இந்த சம்பவம் நடந்த்து. அப்பகுதியில் ஒரு சாலையைத் திறந்து வைத்து விட்டு சுமார் 120 வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது நக்சலைட்டுகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

சுமார் ஆயிரம் மாவோயிஸ்ட் நக்சல்கள் மலைப் பகுதிகளில் மறைந்திருந்து, வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநில டிஜிபி விஸ்வரஞ்சன் கூறுகையில், பலியானவர்களின் உடல்களை மீட்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றார்.

காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஐஜி ஆர்.கே.விஜ் கூறுகையில், 'தாக்குதல் நடந்த பகுதிகளில் இருந்து இதுவரை 73 சிஆர்பிஎப் வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்னும் பலர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+