பள்ளிகளில் முட்டை போடுவது எதற்காக? திருச்சி சிவா விளக்கம்
சங்கரன்கோவில்: பள்ளிகளில் வாரம் மூன்று முட்டை வழங்கப்படுகிறது. இது குழந்தைகளின் நலனுக்காக வழங்கப்படுகிறதே தவிர ஓட்டுக்காக வழங்கப்படவில்லை என்று திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா பேசினார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் சங்கரன்கோவில் சுவாமி சன்னதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்புச்செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவா பேசுகையில்,
'கலைஞர் கருணாநிதி ஆளும் தமிழக அரசு என்றால் அரசு ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம் கிடைக்கும். ஊழியர்கள் போராட்டம் நடத்தாமலும், ஆர்பாட்டத்திலும் ஈடுபடாமலும் கை நிறைய காசு அவர்களுக்கு வீடு தேடி வருகிறது.
நாட்டில் அரசியல் சூழ்நிலைகள், பொருளாதர சி்க்கல் ஏற்படும் நேரங்களில் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருக்கு சுமூக தீர்வு ஏற்பட வழி சொல்பவராக முதல்வர் கருணாநிதி விளங்கி வருகிறார்.
பள்ளிகளில் வாரம் மூன்று முட்டை வழங்கப்படுகிறது. குழந்தைகளின் நலனுக்காக வழங்கப்படுகிறதே தவிர ஓட்டுக்காக வழங்கப்படவில்லை.
நாங்கள் கூட்டம் போட்டால் கட்சியின் கொள்கைகளையும், சாதனைகளையும் விளக்கி பேசுவோம். யாருக்கும் சாபம் வீட்டு பேசுவதில்லை' என்றார்.












Click it and Unblock the Notifications