Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஸ்வைன்' எச்சரிக்கை கொஞ்சம் 'ஓவர்' தான்: உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

Swine Flu
டெல்லி: பன்றிக் காய்ச்சல் குறித்து விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவைதான் என உலக சுகாதார நிறுவன மண்டல இயக்குனர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டில் பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அபாய எச்சரிக்கைகளில் மருந்து நிறுவனங்களின் வியாபார உள்நோக்கம் பொதிந்திருப்பதாக பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டின.

பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து தயாரிக்கும் சில பிரபல மருந்து நிறுவனங்களில் ஆலோசகர்களாக உள்ள விஞ்ஞானிகள் உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய சில பொறுப்புகளில் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஸ்வைன் ஃபுளூ குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அபாய எச்சரிக்கையால், உலகம் முழுவதும் பல நாட்டு அரசாங்கங்கள் இந்த மருந்துகளை கொள்முதல் செய்தன.

இதன்மூலம் குறிப்பிட்ட மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைந்தன என்றும், பணம் சம்பாதிப்பதற்காகவே சிலர் திட்டமிட்டு உலக சுகாதார நிறுவனம் மூலம் பன்றிக்காய்ச்சலை பூதாகரமாக்கி காட்டியுள்ளார்கள் என்றும் புகார்கள் கூறப்பட்டன.

இந்நிலையில், டெல்லியில் உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய மண்டல இயக்குனர் சாம்லீ பிலன்பாங்செங் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது இதுபற்றி அவரிடம் கேட்டபோது, 'ஆம். உண்மை தான். பன்றிக் காய்ச்சலால் நாம் பயந்த அளவுக்கு விபரீதம் ஏற்பட்டுவிடவில்லை' என்றார்.

ஆனால் மருந்து கம்பெனிகளுக்கு சாதகமாகத் தான் இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதுபற்றி விளக்கமாக கூறுவார் என நழுவிவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+