சானியா- மாலிக் கல்யாணம் நடக்குமா, நடக்காதா? - பெட்டிங் ஆரம்பம்!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கிற்கும் வரும் 15ம் தேதி திருமணம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் போல, இந்த திருமண அறிவிப்பு வெளியிட்ட உடனேயே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.
சானியாவுக்கு எதிராக இந்து மற்றும் சுதேசி அமைப்புகள் கொடி பிடிப்பதும், சானியாவுக்கும், இந்திய ரசிகர்களுக்கும் பாகிஸ்தான் டென்னிஸ் வாரியம் சிண்டு முடிவதும், சோயப்பின் முதல் மனைவி என ஆயிஷா அறிக்கை விடுவதுமாக நிலவரம் அதகளமாகி, சோயப்பை போலீசார் ஹைதராபாத்தில் முடக்கும் அளவுக்கு நிலைமை போயுள்ளது.
சானியா - மாலிக் திருமணம் திட்டமிட்டபடி நடக்குமா, நடக்காதா என்ற இந்த நிலைமையை 'புக்கி'கள் லாவகமாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
வரும் 15ம் தேதி சானியா - மாலிக் திருமணம் நடந்துவிட்டால், ரூபாய்க்கு 25 பைசா லாபம் வைத்து பணம் திருப்பித் தரப்படும். திருணம் நடக்கவில்லை என்றால் ரூ.3.50 திருப்பி கிடைக்கும் என்று 'புக்கி'கள் ரகசியமாக ஆட்களை சேர்த்து ருகின்றனர்.
நவி மும்பை, தாணே, அகமதாபாத், டெல்லி, இந்தூர் உள்ளிட்ட இடங்களிலும், ஆன்லைனிலும் இந்த பிசினஸ் ரகசியமாக பரவத் தொடங்கிவிட்டதாம்.












Click it and Unblock the Notifications