2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் 18,000 புள்ளிகளைத் தொட்டது மும்பை சென்செக்ஸ்

நான்காவது காலாண்டு முடிவுகள் சிறந்த முறையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பால் பங்குகளை வாங்குவது அதிகரித்த்தால் சென்செக்ஸ் நல்ல உயர்வைக் கண்டது.
கடந்த மூன்று பங்கு வர்த்தக கால கட்டத்தில் சென்செக்ஸ் தொடர்ந்து உயர்ந்து வந்த்து. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 67.03 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 18,008.40 ஆக உயர்ந்த்து.
கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி மாத்த்தில்தான் சென்செக்ஸ் 18 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டிருந்த்து. அதன் பின்னர் இப்போதுதான் முதல் முறையாக அந்த இலக்கை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல தேசியப் பங்குச் சந்தையான நிப்டி, 19.80 புள்ளிகள் உயர்ந்து, 5,385.80 புள்ளிகளாக இருந்தது.
ஆசியப் பங்குச் சந்தைகளில் காணப்படும் நிலைப்புத் தன்மையும், பாம்பே பங்குச் சந்தையின் உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணம் என்று பங்கு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்பிரா, ஐசிஐசிஐ வங்கி, டிஎல்எப், டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட் ஆகியவை உயர்வு கண்ட நிறுவனங்கள் ஆகும்.












Click it and Unblock the Notifications