ஆண்மை குறைவுக்கு தவறான சிகிச்சை - தொழிலாளிக்கு ரூ. 4.80 லட்சம் நஷ்டஈடு
நெல்லை: ஆண்மை குறைவுக்கு அறுவை சிகிச்சை செய்த கூலித் தொழிலாளிக்கு தவறான சிகிக்சை அளித்த நாகர்கோவில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் ரூ. 4.75 லட்சம் வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நான்குநேரி அருகேயுள்ள தளபதிசமுத்திரத்தை சேர்ந்தவர் தங்கசாமி. கூலித் தொழிலாளி. இவர் ஆண்மை குறைவு சிகிச்சைக்காக வள்ளியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரை செய்தனர்.
கடந்த 1998ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சை பெற்ற பின்னும் அவருக்கு தொடர்ந்து வலி ஏற்பட்டது. தவறான முறையில் டாக்டர் தனக்கு அறுவை சிகிச்சை செய்ததுதான் காரணம் என கூறி கடந்த 2004ம் ஆண்டு நஷ்டஈடு கோரி நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் தங்கசாமி மனு தாக்கல் செய்தார்.
மனுவை நீதிபதி ராமசந்திரன், உறுப்பினர் பத்திர துளசி ஆகியோர் விசாரணை நடத்தினர். தவறான முறையில் சிகிச்சை அளித்த நாகர்கோவில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தங்கசாமிக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications