அமெரிக்காவில் ஆராய்ச்சி விருது பெறும் இந்திய மாணவர்
வாஷிங்டன்: அமெரிக்க பல்கலையில் சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய மாணவர் அமெரிக்காவின் மிக உயர்ந்த ஆராய்ச்சி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரசன் சேட்டர்ஜி என்ற இந்தியர், இந்தியாவின் ஜாவேத்பூர் பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் பிஎஸ் மற்றும் எம்எஸ் முடித்தவர்.
பின்னர் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் பிஎச்டி பட்டம், பெனிசில்வேனியாவில் உள்ள லேயிக் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
நீரில் ஈயம் மற்று்ம செம்புத் தன்மையின் இருப்பை கண்டுபிடிப்பதற்கான புதிய முறைக்கு இவரின் ஆய்வுத் தகவல்கள் மிகவும் உதவிகரமாக அமைந்ததால், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க கெமிக்கல் சொசைட்டியின் சுற்றுச்சூழல் வேதியல் பிரிவின் சார்பில் 'சி எலன் கான்டர் சுற்றுச்சூழல் விருது' என்ற மிக உயர்ந்த விருது சாட்டர்ஜிக்கு வரும் ஆகஸ்ட் மாதம் வழங்கப்படுகிறது.