மின்தடையைக் கண்டித்து ஜெ. தலைமையில் 18ம் தேதி நெய்வேலியில் அதிமுக ஆர்ப்பாட்டம்
இதுகுறித்து ஜெயல்லிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்துள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும், மின்சாரப் பற்றாக்குறையினை உடனடியாக சீர் செய்ய வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் 18 ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.20 மணி அளவில், கடலூர் கிழக்கு மாவட்டம், நெய்வேலி பஸ் நிலையம் அருகில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தின்போது நெய்வேலி டவுன்ஷிப்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலையையும் ஜெயல்லிதா திறந்து வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார். இதைத் தொடர்ந்து தற்போது நெய்வேலி போராட்டத்திற்கு அவர் தலைமை தாங்கவுள்ளார். இதனால் போராட்டத்திற்கு பெருமளவில் அதிமுகவினரைத் திரட்டி வருவது குறித்து கடலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீவிர ஆலோசனைகளில் இறங்கியுள்ளனர்.